ஆப்நகரம்

எல்லாருக்கும் சம்பள உயர்வு.. ஒரே அறிவிப்பில் பல்டி அடித்த அரசு!

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்தி அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 20 Feb 2021, 9:56 pm
அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதையொட்டி அசாம் மாநிலத்தின் முக்கிய வாக்கு வங்கியை குறிவைத்து அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன.
Samayam Tamil cash


அண்மையில் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

செம ஸ்பீட் கொரோனா தடுப்பூசி; உலகையே ஆச்சரியப்பட வைத்த இந்தியா!
அசாம் மாநிலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கணிசமான வாக்கு வங்கியாக இருக்கின்றனர். அமைப்புசார்ந்த துறையில் மட்டுமே 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இருக்கின்றனர். இதுபோக அமைப்புசாரா தொழிலாளர்களும் இருக்கின்றனர்.

இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தியில் அசாம் மாநிலத்தின் பங்கு 52% ஆகும். ராகுல் காந்தியின் அறிவிப்பை தொடர்ந்து அவசர அவசரமாக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது.

போதை மருந்துடன் சிக்கிய பாஜக இளம் தலைவர்; மேற்குவங்கத்தில் பரபரப்பு!
இந்நிலையில், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினக்கூலியை 318 ரூபாயாக உயர்த்தி அசாம் அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இனி தினக்கூலியாக 217 ரூபாய் ஊதியம், கூலி உயர்வு 167 ரூபாய் மற்றும் ரேஷனாக 101 ரூபாயும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதுபோக, அண்மையில் அசாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசியபோது, பட்ஜெட்டில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக 1000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி