ஆப்நகரம்

சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா - என்ன சொல்கிறது தேர்தல் ஆணையம்?

கொரோனா நோய்த் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா, இல்லையா என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Samayam Tamil 11 Aug 2020, 10:18 am
நாடு முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அரசியல் நிகழ்வுகள் தடைபட்டுள்ளன. பீகார் மாநிலத்தின் நடப்பு சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. நவம்பர் 28ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி புதிய அரசு பதவியேற்கவில்லை எனில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும். எனவே கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கும் தற்போதைய நிலையை கருத்திக் கொண்டால் பீகார் மாநிலத்தில் திட்டமிட்டபடி சட்டமன்ற தேர்தல் நடைபெறுமா என்று கேள்வி எழுகிறது.
Samayam Tamil Election Commission of India


இதுபற்றி அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்க ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் சட்டமன்ற தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அன்லாக் குறித்து வெளியாகிறது முக்கிய அறிவிப்பு - பிரதமர் இன்று ஆலோசனை!

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு லோக் ஜனசக்தி கட்சி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், தற்போதைய சூழலில் தேர்தல் நடத்தினால் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் கூறுகையில், பீகாரில் தற்போதைக்கு தேர்தல் நடத்த வேண்டாம். பொதுமக்களின் பாதுகாப்பு தான் முக்கியம்.

பீகார் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டின் நிலையும் மோசமாக காணப்படுகிறது. பீகாரில் மூன்றில் ஒரு குடும்பத்திற்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார். இதேபோல் பாஜக தரப்பு கூறுகையில், தேர்தல் நிறுத்தி வைப்பதும், தள்ளிவைப்பதும் தேர்தல் ஆணையத்தின் கையில் இருக்கிறது. இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

அவர் ஓகே சொல்லிட்டார்... காங்கிரஸ் ஹேப்பி!!

இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், பீகாரில் திட்டமிட்டபடி சட்டமன்ற தேர்தல் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.

அடுத்த செய்தி