ஆப்நகரம்

இலங்கையை தாக்கிய புயல்: 5 பேர் உயிரிழப்பு, 23 பேர் மாயம்!

இலங்கை அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி இலங்கையை தாக்கியது.

TNN 1 Dec 2017, 4:42 am
இலங்கை அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி இலங்கையை தாக்கியது.
Samayam Tamil at least seven people dead and five fishermen missing in srilanka as a tropical storm hit the country
இலங்கையை தாக்கிய புயல்: 5 பேர் உயிரிழப்பு, 23 பேர் மாயம்!


இலங்கை அருகில் தென் மேற்கு வங்க கடலில் 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இலங்கை அருகே நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி இலங்கையை தாக்கியது. இதன் விளைவாக இலங்கை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இந்த புயல் மற்றும் மழை காரணமாக 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 4 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 13 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. தற்போது, இவர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

At least seven people dead and five fishermen missing in #SriLanka as a tropical storm hit the country. (Earlier visuals) pic.twitter.com/JPnkqYZ2NW — ANI (@ANI) November 30, 2017 மீன்பிடிக்கச் சென்ற இந்த மீனவர்களை சேர்த்து மொத்தம் 23 பேரைக் காணவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்புவில் இருந்து 200 கிமீ தொலையில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 150 மி.மீ மழை பெய்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் இயற்கை சீற்றம் காரணமாக கடும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த மே மாதம் பெய்த மழையில் மண் சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி