ஆப்நகரம்

உ.பி.யின் அனைத்து நதிகளிலும் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படும் – முதல்வா் யோகி

உத்தர பிரதேச மாநிலத்தில் பாயும் அனைத்து நதிகளிலும் முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படும் என்று அம்மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 17 Aug 2018, 11:32 pm
உத்தர பிரதேச மாநிலத்தில் பாயும் அனைத்து நதிகளிலும் முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படும் என்று அம்மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Yogi Adityanat


முன்னாள் பிரதமா் வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிாிழந்தாா். அவரது உடல் உரிய அரசு மரியாதையுடன் வெள்ளிக் கிழமை மாலை எரியூட்டப்பட்டது. வாஜ்பாய் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னௌ பகுதியில் இருந்து 5 முறை எம்.பி.யாக தோ்வு செய்யப்பட்டாா்.

இந்நிலையில் வாஜ்பாய்க்கும், உத்தரபிரதேச மாநிலத்திற்கும் உள்ள பினைப்பை உறுதி செய்யும் விதமாக அவரது அஸ்தி மாநிலத்தில் உள்ள அனைத்து நதிகளிலும் கரைக்கப்படும் என்று அம்மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தொிவித்துள்ளாா். மேலும் மாநிலத்தில் உள்ள மொத்த நதிகளின் பட்டியல், பெரிய நதி, சிறிய நதி உள்ளிட்ட பட்டியலையும் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளாா்.

உத்தரபிரதேச மக்கள் வாஜ்பாயின் இறுதி பயணத்தில் கலந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அஸ்தி கரைப்பு அறிவிப்பை வெளியிடுவதாக அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி