ஆப்நகரம்

காரில் திடீர் தீ: உயிர் தப்பினார் ஓட்டுநர்

அலிபூர் அருகே சோனா சாலையில் வந்துகொண்டிருந்த காரில் ஏற்பட்ட திடீர் விபத்தில் காரை ஓட்டிவந்த நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

TOI Contributor 24 Jun 2016, 2:11 pm
குர்கான்: அலிபூர் அருகே சோனா சாலையில் வந்துகொண்டிருந்த காரில் ஏற்பட்ட திடீர் விபத்தில் காரை ஓட்டிவந்த நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
Samayam Tamil audi bursts into flames no one hurt
காரில் திடீர் தீ: உயிர் தப்பினார் ஓட்டுநர்


அலிபூரில் வசிக்கும் கவுரவ் என்பவர் நேற்று இரவு தன் வீட்டுக்கு அருகேயுள்ள சுன்ஹெலா என்ற கிராமத்திற்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்தார். அலிபூர் பேருந்து நிலையம் அருகே கார் வந்தபோது காரிலிருந்து புகை எழுவதை கவனித்தார். புகை வரும் இடத்தை கண்டுபிடிப்பதற்குள் காரிலிருந்து தீப்பொறிகள் ஏற்பட்டன.

அடுத்த சில நொடிகளில் காரின் எஞ்சின் வெடித்து காரில் தீ பற்றிக்கொண்டது. தீப்பொறிகளைக் கண்டதும் காரை விட்டு விலகிவிட்ட கவுரவ் மயிரிழையில் உயிர்தப்பினார்.

விபத்தை நேரில் பார்த்த அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அடுத்த பதினைந்து நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து காரில் பற்றிய நெருப்பை அணைத்தனர்.

“காரில் பற்றிய நெருப்பை தீயணைப்புப் படையினர் முழுமையாக அணைத்துவிட்டர். இருப்பினும் கார் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. விப்த்துக்குக் காரணம் எஞ்சினில் ஏற்பட்ட குறைபாடாக இருக்கலாம். இந்த விபத்து குறித்து காரை ஓட்டிவந்தவர் காவல்துறை இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை” என்று போன்சி காவல்நிலையத் தலைமைக் காவலர் விக்ரம் நெஹ்ரா தெரிவித்தார்.

இதனிடையே, சாலையில் ஏற்பட்ட கார் விபத்து காரணமாக அந்த இடத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. போக்குவரத்தை காவல்துறையினர் விரைவில் ஒழுங்குபடுத்தியதும் மீண்டும் அவ்விடத்தில் சகஜநிலை உருவானது.

அடுத்த செய்தி