ஆப்நகரம்

ஆகஸ்ட் 5 - பூமி பூஜைக்கு உகந்த நாளா? சாஸ்திரங்கள் கூறுவது இதுதான்!

ஆகஸ்ட் 5 அன்று ராமர் கோயில் பூமி பூஜை நடத்த அனுகூலமற்ற நாள் என தெரியவந்துள்ளது.

Samayam Tamil 4 Aug 2020, 10:27 pm

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நாளை (ஆகஸ்ட் 5) பூமி பூஜை நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர்.
Samayam Tamil ராமர் கோயில்


இதற்காக அயோத்தி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில்... சுவாரஸ்யமான தகவல்கள்!!

ராமர் கோயில் பூமி பூஜைக்கு வெகுவான வரவேற்பு கிடைத்திருந்தாலும், இந்து மதகுருக்கள், துறவிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. நாளை நடைபெறவிருக்கும் பூமி பூஜை, இந்து மத சடங்குகளுக்கு முரணாக இருப்பதால் மதகுருக்கள் அப்செட்டாக இருக்கின்றனர்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி பூமி பூஜைக்கு அனுகூலமான நாள் இல்லை என்பதே சங்கராச்சாரியர் உள்ளிட்ட மதகுருக்களின் கருத்து. அதாவது, ஜோதிட ரீதியாகவும், மதச் சடங்குகளின் வழக்கப்படியும், பத்ரபாத மாதத்தில் (ஜூலை-ஆகஸ்ட்) தேய்பிறையின் இரண்டாவது நாள் அனுகூலமற்றதாக கருதப்படுகிறது.

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா... இத்தனை பேருக்குதான் அழைப்பாம்!!

இதுமட்டுமல்லாமல், பத்ரமாத மாதத்தில் கடவுள்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால், கடவுள்களை அழைத்து தொந்தரவு செய்யக்கூடாது என்பது மதகுருமார்களின் கருத்து. ஆனால், இதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், நாளை பூமி பூஜை நடத்த எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மதகுருக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி