ஆப்நகரம்

மும்பை தாக்குதலில் அபு ஜூண்டால் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட லஷ்கர்-ஈ-தொய்பா தீவிரவாதி அபு ஜூண்டால் குற்றவாளி என்று மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

TOI Contributor 28 Jul 2016, 12:51 pm
மும்பை தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட லஷ்கர்-ஈ-தொய்பா தீவிரவாதி அபு ஜூண்டால் குற்றவாளி என்று மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
Samayam Tamil aurangabad arms haul case abu jundal others held guilty
மும்பை தாக்குதலில் அபு ஜூண்டால் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு


மேலும், அவுரங்காபாத்தில் கடந்த 2006ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய 11 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டில் நடந்த கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி மற்றும் விஹெச்பி தலைவர் பிரவீன் தொகாடியாவை கொல்ல நடந்த சதிதான் அவுரங்காபாத் சம்பவம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட 3 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட லஷ்கர்-ஈ-தொய்பா தீவிரவாதி அபு ஜூண்டாலை, டெல்லி போலீசார் கைது செய்தனர்.

அபு ஜூண்டாலிடம் இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி