ஜி20 மாநாடு ஜூன் 28, 29 ஆகிய நாட்களில் (நேற்றும் இன்றும்) ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஜப்பான் சென்றார். மாநாட்டின் முதல் நாளான நேற்று பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இரண்டாம் நாளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் மோரிசன் பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அந்தப் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “மோடி எவ்வளோ நல்லா இருக்கார்” என்ற பொருள் தரும் “கித்னா அச்சா ஹி மோடி” என்ற இந்தி வாசகத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு உடனடியாக பதில் அளித்தார் பிரதமர் மோடி. அந்தப் பதிவை ரீட்வீட் செய்து தனது பதிலைப் பதிவிட்ட அவர், “இருதரப்புப் பேச்சுவார்த்தை உற்சாகம் அளிப்பதாக அமைந்தது!” எனக் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் மோரிசன் பதிவிட்ட மோடி செல்பி வைரலாக பரவி வருகிறது.
ஜி20 மாநாட்டில் இன்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ, இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோடோ, துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், ஆகியோரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை மேற்கொண்டார்.
இதனையடுத்து நடைபெற்ற பெண்கள் முன்னேற்றம் குறித்த சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சுகாதாரத்தைப் பேணுவது பற்றி பேசினார். அப்போது, யோகா உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய வழிமுறைகளை வலியுறுத்தினார். உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் பற்றியும் அந்த அரங்கில் பேசியுள்ளார்.
பேரிடர்கள் இயற்கையானவையாகவோ, மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவையாகவோ இருக்கலாம். அவற்றிலிருந்து மீள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் அவற்றால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்கள்தான் எனக் கூறிய பிரதமர் மோடி, பிற நாடுகளும் பேரிடர் மீட்பு கட்டமைப்புப் பணிகளில் பங்களிக்கும் வகையில் சர்வதேச அளவிலான கூட்டணிக்கு முன்வர வேண்டும் என அழைத்தார்.
ஜி20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் முடிவடைந்த பின், விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் மோரிசன் பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அந்தப் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “மோடி எவ்வளோ நல்லா இருக்கார்” என்ற பொருள் தரும் “கித்னா அச்சா ஹி மோடி” என்ற இந்தி வாசகத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு உடனடியாக பதில் அளித்தார் பிரதமர் மோடி. அந்தப் பதிவை ரீட்வீட் செய்து தனது பதிலைப் பதிவிட்ட அவர், “இருதரப்புப் பேச்சுவார்த்தை உற்சாகம் அளிப்பதாக அமைந்தது!” எனக் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் மோரிசன் பதிவிட்ட மோடி செல்பி வைரலாக பரவி வருகிறது.
ஜி20 மாநாட்டில் இன்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ, இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோடோ, துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், ஆகியோரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை மேற்கொண்டார்.
இதனையடுத்து நடைபெற்ற பெண்கள் முன்னேற்றம் குறித்த சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சுகாதாரத்தைப் பேணுவது பற்றி பேசினார். அப்போது, யோகா உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய வழிமுறைகளை வலியுறுத்தினார். உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் பற்றியும் அந்த அரங்கில் பேசியுள்ளார்.
பேரிடர்கள் இயற்கையானவையாகவோ, மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவையாகவோ இருக்கலாம். அவற்றிலிருந்து மீள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் அவற்றால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்கள்தான் எனக் கூறிய பிரதமர் மோடி, பிற நாடுகளும் பேரிடர் மீட்பு கட்டமைப்புப் பணிகளில் பங்களிக்கும் வகையில் சர்வதேச அளவிலான கூட்டணிக்கு முன்வர வேண்டும் என அழைத்தார்.
ஜி20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் முடிவடைந்த பின், விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.