ஆப்நகரம்

கடத்தல் சிலைகளோடு இந்தியா வரும் ஆஸ்திரேலியா பிரதமர்

ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தி செல்லப்பட்ட 3 பழம் பெரும் சிலைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Samayam Tamil 27 Nov 2019, 9:25 pm
இந்தியாவிலிருந்து குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து பழமையான பல சிலைகள் ஆஸ்திரேலியா நாட்டுக்குக் கடத்திக் கொண்டு செல்லப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகப் பல வழக்குகள் இப்போதும் விசாரணையில் உள்ளது.
Samayam Tamil 157485331190448


நாட்டின் இரண்டாவது தலைநகரம் தென்னிந்தியாவில் அமைக்கப்படுமா? - நாடாளுமன்றத்தில் ருசிகர விவாதம்

இதற்கிடையே சமீபத்தில்கூட பிராதான பெருமை மிக்க நடராஜர் சிலை ஒன்று ஆஸ்திரேலியாவிலிருந்து மேள தாளத்தோடு நாட்டுக்குத் திருப்பிக் கொண்டு வரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், ஆஸ்திராவியாலிருந்து இந்தியாவுக்குச் சொந்தமான 3 சிலை நாடு திரும்ப உள்ளது.

இந்தியாவுக்குச் சொந்தமான 2 துவார பாலகர்கள் சிலைகளும், மிகப் பழமையான நாக ராஜர் சிலையும் ஆஸ்திரேலியாவுக்கு மர்ம கும்பல் கடத்தி சென்று அங்குச் சிலரிடம் அதிக விலைக்கு விற்றுள்ளது.

மீண்டும் செயல்படத் தொடங்கும் பாலகோட் தீவிரவாத முகாம்கள்... அமைச்சர் பகீர் தகவல்

இதுகுறித்து ஆஸ்திரேலியா அரசுக்குத் தெரிய வந்ததும், சிலையை மீட்டு வைத்துள்ளதாக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிஸன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா வருகிறார். அப்போது அந்த பழமை வாய்ந்து 3 சிலைகளையும் ஸ்காட் மோரிஸன் இந்தியாவிடம் ஒப்படைக்கிறார் எனக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி