இனிமேல் அரசு அதிகாரிகள் ஜீன்ஸ் பேன்ட் அணியக் கூடாது என்று திரிபுரா அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் பணி நேரங்களில் டி சர்ட், ஜீன்ஸ், கூலிங் கிளாஸ் போன்றவற்றை அணியக் கூடாது என்று திரிபுரா அரசு உத்தரவிட்டுள்ளது.
அலுவலகங்களில் பணி நேரங்களில் வழக்கமான உடைகளைத் தவிர ஜீன்ஸ், டிசர்ட், கூலிங் கிளாஸ் போன்றவற்றை அரசு அதிகாரிகள் பயன்படுத்தக் கூடாது என்று திரிபுரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தின் முதன்மை செயலர், சுஷில் குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் ஜீன்ஸ் பேன்ட், டிஷர்ட், கூலிங் கிளாஸ் போன்றவற்றை அணிவது தொடர்பாக புகார்கள் வந்தன. மேலும், பணி நேரங்களில் மொபைல் போன்களை பயன்படுத்துவது குறித்தும் தொடர்ந்து புகார்களும் வந்துள்ளது.
இதனை தவிர்ப்பதற்காக இனிவரும் காலங்களில் அரசு அதிகாரிகள் இது போன்று உடைகளையும் கூலிங் கிளாஸ் ஆகியவற்றை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலோசனைக் கூட்டங்களின் போது மொபைல் போன்களை சுவிட் ஆப் செய்ய வேண்டும். இதனை உயரதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அலுவலகங்களில் பணி நேரங்களில் வழக்கமான உடைகளைத் தவிர ஜீன்ஸ், டிசர்ட், கூலிங் கிளாஸ் போன்றவற்றை அரசு அதிகாரிகள் பயன்படுத்தக் கூடாது என்று திரிபுரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தின் முதன்மை செயலர், சுஷில் குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் ஜீன்ஸ் பேன்ட், டிஷர்ட், கூலிங் கிளாஸ் போன்றவற்றை அணிவது தொடர்பாக புகார்கள் வந்தன. மேலும், பணி நேரங்களில் மொபைல் போன்களை பயன்படுத்துவது குறித்தும் தொடர்ந்து புகார்களும் வந்துள்ளது.
இதனை தவிர்ப்பதற்காக இனிவரும் காலங்களில் அரசு அதிகாரிகள் இது போன்று உடைகளையும் கூலிங் கிளாஸ் ஆகியவற்றை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலோசனைக் கூட்டங்களின் போது மொபைல் போன்களை சுவிட் ஆப் செய்ய வேண்டும். இதனை உயரதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.