ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு விவகாரம்:வழக்கு தொடர அஞ்சலி சர்மாவுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ரத்து..!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல வாரியம் சார்பாக வழக்கு தொடர வழக்கறிஞர் அஞ்சலி சர்மாவுக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

TNN 28 Jan 2017, 7:46 pm
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல வாரியம் சார்பாக வழக்கு தொடர வழக்கறிஞர் அஞ்சலி சர்மாவுக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil awbi withdraws the power of anjali sharma to file case against jallikttu
ஜல்லிக்கட்டு விவகாரம்:வழக்கு தொடர அஞ்சலி சர்மாவுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ரத்து..!


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தை தொடர்ந்து,தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்தியது.

இந்நிலையில் மத்திய அரசின் மிருக வதை தடைச்சட்டத்தின் அம்சங்களுக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றியிருப்பதாகவும்,எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி இந்திய விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞரான அஞ்சலி சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர அஞ்சலி சர்மாவுக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரத்தை ரத்து செய்வதாக இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.ஏற்கனவே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் வழக்கு தொடர,தவறுதலாக அஞ்சலி சர்மாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகவும் விலங்குகள் நல வாரியத்தின் தலைவர் நேகி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை திரும்பப் பெறுமாறு,தமிழக விலங்குகள் நல வாரியத் தலைவர் ரவிக்குமார் அஞ்சலி சர்மாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.இந்த கடிதம் குறித்து பதிலளித்த அஞ்சலி சர்மா,2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்த இடைக்கால மனுவை மட்டுமே தாக்கல் செய்துள்ளதாகவும்,தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து மனுத் தாக்கல் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

AWBI withdraws the power of Anjali Sharma to file case against Jallikttu

அடுத்த செய்தி