ஆப்நகரம்

அயோத்தி தொடா்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று விசாரணை

அயோத்தி விவகாரம் தொடா்பாக அலகாபாத் உயா்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்கிறது.

Samayam Tamil 29 Oct 2018, 6:46 am
அயோத்தியில் சா்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடா்பான வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்கிறது.
Samayam Tamil Supreme-Court_Reuters


அயோத்தியில் சா்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடா்பான வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. தீர்ப்பில் சா்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிா்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் பகிா்ந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த தீா்ப்பை எதிா்த்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு கடந்த செப்டம்பா் மாதம் 27ம் தேதி விசாரணை நடத்தியது. அப்போது ஆதாரங்கள் அடிப்படையில் நிலத்தின் உரிமை குறித்து சிவில் அமா்வு அக்டோபா் 29ம் தேதி முடிவு செய்யும் என்று தொிவித்தனா்.

அதன்படி, உச்சநீதிமன்றத்தில் அயோத்தி விவகாரம் குறித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

அடுத்த செய்தி