ஆப்நகரம்

Ram mandhir: அயோத்தியில் கொரோனா... அடிக்கல் நாட்டு விழா நடக்குமா?

அடிக்கல் நாட்டு விழாவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள​​ நிலையில், ராமர் கோயில் பகுதியிலேயே 16 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, விழா திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் கருத்துகள் உலவி வருகின்றன.

Samayam Tamil 30 Jul 2020, 8:01 pm
அயோத்தி ராமர் கோயில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் சாமியார் உள்ளிட்டோருக்க்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
Samayam Tamil ram mandhir front


உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக்ஸ்ட் 5 ஆம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டுள்ளார். நாடு முழுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், குறைந்த அளவாக வெறும் 300 பேர் மட்டும் அழைக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமர் கோயில் அடிக்கல் நாட்டப்பட உள்ள பகுதியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயோத்தி சாமியார் ஒருவருக்கும் சேர்த்து மொத்தம் 16 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Ram janmabhoomi: அயோத்தியில் டைம்ஸ் கேப்சூலா? யாரும் நம்ப வேண்டாம்

அடிக்கல் நாட்டு விழாவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், ராமர் கோயில் பகுதியிலேயே 16 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, விழா திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் கருத்துகள் உலவி வருகின்றன.

இன்னும் 5 நாட்களுக்குள் வேறு யாருக்கும் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிந்தும், அனைத்து இடங்களையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தும் தயார் செய்துவிட முடியுமா என்றும் தெரியாததால், அடிக்கல் நாட்டு விழா தள்ளிப் போகலாம் என்றும் தகவல்கள் உலவுகின்றன.

அடுத்த செய்தி