ஆப்நகரம்

Breaking: அயோத்தி தீர்ப்பு: உச்ச நீதிமன்ற பகுதியில் 144 தடை

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகுவுள்ளதால் உச்ச நீத்தோமாற்ற பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Nov 2019, 9:20 am
அயோத்தி நில வழக்கின் இறுதி தீர்ப்பானது இன்று காலை 10 .30 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்ட வேளையில் அயோத்தி மற்றும் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil அயோத்தி தீர்ப்பு: உச்ச நீதிமன்ற பகுதியில் 144 தடை


அயோத்தி வழக்கு தீர்ப்பு... உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் !!

இந்த தீர்ப்பை வழங்கவிருக்கும் அரசியல் சாசன அமர்வின் பிராதன தலைவரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு இசட் ப்ளஸ் உச்சகட்ட பாதுகாப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அயோத்தி வழக்கு தீர்ப்பு... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள்

மேலும் உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியிலும் 144 தடைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியாக இன்னும் சொற்ப நேரமே உள்ளதால், உச்ச நீதிமன்ற வளாகத்தை சுற்றி பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி