ஆப்நகரம்

அடுத்து ஆடை வியாபாரம் ஆரம்பிக்க போறேன்; பாபா ராம்தேவ்

அடுத்த ஆண்டு முதல் பதஞ்சலி கார்மென்ட்ஸ் எனும் ஆடை வியாபாரம் துவங்கவுள்ளதாக பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Apr 2018, 1:02 pm
அடுத்த ஆண்டு முதல் பதஞ்சலிகார்மென்ட்ஸ் எனும் ஆடை வியாபாரம் துவங்கவுள்ளதாக பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.
Samayam Tamil baba ramdev


யோகா குரு பாபா ராம் தேவ், பதஞ்சலி எனும் பெயரில் பலசரக்கு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ஆன்லைனிலும், தனித்தனியாக ஷோ ரூம்களை அமைத்தும் இந்தியா முழுவதும் இவருடைய பொருட்கள் பிரபலமாகியுள்ளது.

இயற்கையான முறையில் பதஞ்சலி பொருட்கள் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், பல இடங்களில் இவருடைய பொருட்கள் தரமற்றவை என்றும் காலாவதியானவை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் பதஞ்சலி கார்மென்ட்ஸ் என்ற பெயரில் ஆடை வியாபாரம் துவங்கவுள்ளதாக பாபா ராம் தேவ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “ மக்கள் என்னிடம்,நீங்கள் ஏன் துணி வியாபரமும் செய்யக்கூடாது என்று கேட்கிறார்கள். எனவே தான், துணி வியாபாரம் செய்ய நாங்கள் முடிவெடுத்துள்ளோம். குழந்தைகள், ஆண்கள், பெண்களுக்கென அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், ஆடை தயாரிப்புகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி