ஆப்நகரம்

சிலியில் இருந்து கடத்தப்பட்ட மாகா கிளி பறிமுதல்

சிலி நாட்டில் கடத்தி வரப்பட்ட மாகா என்னும் பெரியவகை பஞ்சவர்ணக் கிளி குஞ்சுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சட்டத்துக்குப் புறம்பான கிளி வேட்டை மற்றும் கடத்தில் ஆஃப்ரிக்க நாடுகளில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 14 Feb 2019, 12:02 pm
சிலி நாட்டில் கடத்தி வரப்பட்ட மாகா என்னும் பெரியவகை பஞ்சவர்ணக் கிளி குஞ்சுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சட்டத்துக்குப் புறம்பான கிளி வேட்டை மற்றும் கடத்தில் ஆஃப்ரிக்க நாடுகளில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil parrot


சிலி நாட்டில் உள்ள ஓஸர்னோ நகரில் இந்தியாவுக்கு அரியவகை பறவைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் காரில் கடத்தப்பட்ட 29 பஞ்சவர்ணக் கிளிக் குஞ்சுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கார் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 30 குஞ்சுகள் கைப்பற்றப்பட்டன.

பிடிப்பட்ட கிளிக்குஞ்சுகள் சிலி தேசிய விலங்கியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஃப்ரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட மாகா எனப்படும் பஞ்சவர்ணக் கிளியானது ஆசிய நாடுகளுக்கு கப்பல் மூலம் சட்டவிரோதமாகக் கடத்தப்படுகிறது.
இதனைத் தடுக்க பல நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அழிந்துவரும் பச்சை கிளியை விற்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில் அரியவகை பறவைகள் விற்பனைக்காக அடிக்கடி கடத்தப்படுகின்றன.

இதனை வாங்க பல செல்வந்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி