ஆப்நகரம்

திருப்பதி பக்தர்களுக்கு ‘நச்’ அறிவிப்பு: இனி ஈஸியா ஏழுமலையானை தரிசிக்கலாம்!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு வசதியாக விமானம் மூலம் பாலாஜி தர்ஷன் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Samayam Tamil 15 Feb 2021, 11:24 am
நாளுக்கு நாள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. ஆனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
Samayam Tamil Tirupati Balaji Darshan


பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. மேலும் ஆந்திர அரசு பல்வேறு வசதிகளை செய்துகொடுக்கிறது.

ஐஆர்சிடிசியும் புதிய திட்டத்தை சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பதிக்கு ரயிலில் வந்து சேரும் பயணிகளை ஒரு நாளில் பத்மாதி அம்மையார் தரிசனம், ஏழுமலையான் தரிசனம் ஆகியவற்றை பார்க்க வைத்து மீண்டும் ரயில் நிலையத்துக்கு அழைத்து வரும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

சசிகலாவின் ‘பலே’ திட்டம்: அதிமுகவுக்குள் பூகம்பம் வெடிக்குமா?

ஏற்கெனவே பேருந்து மூலமாக ஏழுமலையானை தரிசிக்கவும், ரயில் மூலம் பயணிகளை ஒருங்கிணைக்கவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ‘பாலாஜி தர்ஷன்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாலாஜி தர்ஷன் என்ற பெயரில் செயல்பட உள்ள புதிய திட்டம் டெல்லி - திருப்பதி இரு மார்க்கத்திலும் விமானக் கட்டணங்கள், தங்கும் விடுதி, உணவு, திருமலை, திருச்சானூர், காளஹஸ்தி கோயில் தரிசனக் கட்டணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ரேஸில் முந்தும் அதிமுக: வெளியான முக்கிய அறிவிப்பு!
இந்த திட்டத்தின்படி நபர் ஒருவருக்கு 16 ஆயிரத்து 535 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.

அடுத்த செய்தி