ஆப்நகரம்

கடத்தப்பட்ட கல்லூரி மாணவி 10 நாட்கள் தொடர் பலாத்காரம்.!

பெங்களூரில் 17 வயது கல்லூரி மாணவியை கடத்தி வைத்து, 10 நாட்களாக பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

TNN 17 Nov 2017, 10:42 am
பெங்களூரில் 17 வயது கல்லூரி மாணவியை கடத்தி வைத்து, 10 நாட்களாக பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil bangalore college student continuously raped by 10 days
கடத்தப்பட்ட கல்லூரி மாணவி 10 நாட்கள் தொடர் பலாத்காரம்.!


பெங்களூர், ஒய்ட்பீல்டு பகுதியிலுள்ள, கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவி, சில நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். மாணவியை கடத்திய மர்ம நபர்கள், ஒய்ட்பீல்டு ரயில்வே நிலையம் அருகேயுள்ள 'கிளாசிக்கல் இன்' என்ற ஹோட்டல் லாட்ஜில் வைத்து 10 நாட்களாக, மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, அந்த பெண் மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக ராகவேந்திரா (27), சாகர் (22), மஞ்சுராஜ் (32), மனோரஞ்சன் பண்டிட் (52) ஆகிய நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பண்டிட் அந்த ஹோட்டலின் உரிமையாளர். ராகவேந்திரா, சாகர் மற்றும் மஞ்சுராஜ் ஆகிய மூவரும், சம்பவம் நடந்த லாட்ஜ் அருகே டீ ஸ்டால் மற்றும் பால் பூத் வைத்துள்ளவர்கள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து குறித்து மாணவி கூறுகையில், சக நண்பர் ஒருவர் அழைப்பதாக இவர்கள் மூவரும் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் தான் கடத்தப்பட்டதை அறிந்ததாகவும், லாட்ஜில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மாணவியை வன்புணர்வு செய்த விவகாரம், லாட்ஜ் உரிமையாளர் பண்டிட்டுக்கு தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து போலீசில் புகார் தரப்போவதாகவும் உரிமையாளர் மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கு பதிலாக இளம்பெண்ணை பலாத்காரம் செய்துகொள்ளுங்கள் என்று முக்கிய குற்றவாளிகள் மூவரும் அவரிடம் கூறியுள்ளனர். சபலப்பட்ட 52 வயது பண்டிட்டும், 17 வயது மாணவியை வன்புணர்வு செய்துள்ளார். லாட்ஜ் உரிமையாளருடன் சேர்ந்து மொத்தம் 4 பேரும், 10 நாட்களாக கல்லூரி மாணவியை மாறி மாறி தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

குற்ற வாளிகளை கைது செய்த போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களின் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளனர்.

கல்லூரி மாணவியை கடத்தி 10 நாட்களாக பாலியல் வன்புணர்வில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி