ஆப்நகரம்

திருமணத்துக்கு மறுத்த காதலன்: ஆசிட் வீசிய காதலி

திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது, ஆசிட் வீசிய காதலியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TNN 19 Jan 2017, 9:00 pm
பெங்களூரு: திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது, ஆசிட் வீசிய காதலியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil bangalore nurse attacked his boy friend by acid for refused marriage
திருமணத்துக்கு மறுத்த காதலன்: ஆசிட் வீசிய காதலி


கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்தவர் லிதியா(26). அவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். அவரும், துணி வியாபாரி ஜெயக்குமாரை(30), கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, லிதியா ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்து, சந்திக்கவும் மறுத்து வந்துள்ளார். இதையடுத்து, இருவரிடமும் தகராறு ஏற்பட்டு, ஸ்ரீராமபுரம் காவல்நிலையத்தை நாடினர். அவர்கள் இருவரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் ஜெயக்குமார் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருக்கும் போது, அவரது முகத்தில் ஆசிட் வீசி பிளேடால் கீறிவிட்டு தப்பியோடினார்.

அதனால் அவரது முகம் வெந்துபோனது. இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், லிதியாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bangalore nurse attacked his boy friend by acid for refused marriage.

அடுத்த செய்தி