ஆப்நகரம்

இரவு பெய்த மழையில் மிதக்கும் பெங்களூரு; படாத பாடு படும் பொதுமக்கள்!

இரவு முழுவதும் பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

TNN 25 Sep 2017, 1:05 pm
பெங்களூரு: இரவு முழுவதும் பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
Samayam Tamil bangalore rain made suffer to people
இரவு பெய்த மழையில் மிதக்கும் பெங்களூரு; படாத பாடு படும் பொதுமக்கள்!


கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் நேற்று இரவு மழை பெய்யத் தொடங்கியது.

இன்று காலை வரை தொடர் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்லும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தொடர் மழை காரணமாக பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது.

ஆனேக்கல்லில் 99.5மிமீ, பாகல்குண்டேவில் 88.5மிமீ, கிழக்கு பெங்களூருவில் 70மிமீ, தெற்கு பெங்களூருவில் 63மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Bangalore rain made suffer to people.

அடுத்த செய்தி