பெங்களூரு: ஜெயலலிதா படித்த பள்ளியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், அவரை துணிச்சலில் உச்சம் தொட்டவர் என புகழாரம் சூட்டினர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 5ஆம் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா படித்த பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில், அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பள்ளியின் முன்னாள் முதல்வர் ஸ்டெல்லா, ஜெயலலிதாவுடன் படித்த பாத்திமா ஜாபர், அசிஸ், டவுரத்தி சம்பத், நோவலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பேசிய ஸ்டெல்லா, ஜெயலலிதாவை சந்தித்த போது, அப்பள்ளியில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை அவருடன் பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டார். இதையடுத்து கடந்த முறை முதலமைச்சராக பதவியேற்ற போது, தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறினார்.
ஜெயலலிதாவுடன் படித்த தோழி ஒருவர் பேசிய போது, மறைந்த ஜெயலலிதா மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார் என்றும், நன்கு படிக்கக்கூடியவர், விளையாட்டு, நடனம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டியதாக தெரிவித்தார். ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் துணிச்சலாக செயல்பட்டு, உச்சத்தை தொட்டவர் என்று புகழாரம் சூட்டினார்.
Bangalore school is mourning late TN CM Jayalalitha in the meeting.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 5ஆம் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா படித்த பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில், அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பள்ளியின் முன்னாள் முதல்வர் ஸ்டெல்லா, ஜெயலலிதாவுடன் படித்த பாத்திமா ஜாபர், அசிஸ், டவுரத்தி சம்பத், நோவலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பேசிய ஸ்டெல்லா, ஜெயலலிதாவை சந்தித்த போது, அப்பள்ளியில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை அவருடன் பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டார். இதையடுத்து கடந்த முறை முதலமைச்சராக பதவியேற்ற போது, தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறினார்.
ஜெயலலிதாவுடன் படித்த தோழி ஒருவர் பேசிய போது, மறைந்த ஜெயலலிதா மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார் என்றும், நன்கு படிக்கக்கூடியவர், விளையாட்டு, நடனம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டியதாக தெரிவித்தார். ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் துணிச்சலாக செயல்பட்டு, உச்சத்தை தொட்டவர் என்று புகழாரம் சூட்டினார்.
Bangalore school is mourning late TN CM Jayalalitha in the meeting.