ஆப்நகரம்

பெங்களூரு பொறியாளருக்கு கொரோனா; ஓட்டம்பிடித்தாரா மனைவி - உண்மை என்ன தெரியுமா?

கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மனைவி யாரிடமும் சொல்லாமல் சொந்த ஊருக்கு சென்றுவிட்டாரா என்பது பற்றி கர்நாடக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Mar 2020, 10:57 am
பெங்களூருவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் நபரை ஆக்ராவை சேர்ந்த 25 வயது இளம்பெண் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இத்தாலி நாட்டிற்கு ஹனிமூன் சென்றதாக கூறப்பட்டது. அதன்பிறகு பெங்களூரு திரும்பிய நிலையில், கணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அறிந்து அவரது மனைவி மார்ச் 7ஆம் தேதி அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டதாக தகவல்கள் பரவின.
Samayam Tamil Corona in Bengaluru


இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாநில மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர், கணவனும், மனைவியும் கிரீஸ் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கிருந்து மார்ச் 6ஆம் தேதி மும்பை திரும்பியுள்ளனர். பின்னர் மார்ச் 8ஆம் தேதி இரவு 9.45 மணியளவில் இருவரும் பெங்களூரு வந்தனர்.

இதையடுத்து மார்ச் 9ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் அப்பெண் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கிருந்து சொந்த ஊரான ஆக்ராவிற்கு பயணம் மேற்கொண்டார். பெங்களூரு பொறியாளருக்கு ஒருநாள் கழித்த பிறகே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மார்ச்12ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே தனது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இல்லாத சூழலில் தான் அப்பெண் ஆக்ரா சென்றுள்ளார்.

100ஐ தாண்டிய வைரஸ் பாதிப்பு- இந்தியாவால் கொரோனாவை சமாளிக்க முடியவில்லையா!

ஆகையால் அவர் கணவனை பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறுவது தவறு. அந்த பெண் பெங்களூருவிற்குள் நுழையவே இல்லை. மும்பை வந்தவுடன் அங்கிருந்து அப்பெண் டெல்லி சென்றிருக்கக் கூடும். ஆனால் தனது கணவரை வழியனுப்பி வைப்பதற்காக பெங்களூரு வரை வந்து சென்றிருக்கிறார்.

மேலும் அப்பெண்ணும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு முதல்கட்ட பரிசோதனை கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறுகிறது. இருப்பினும் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுபற்றி உத்தரப் பிரதேச அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவலுக்காக கர்நாடக அரசு காத்துக் கொண்டிருக்கிறது. ஆக்ராவில் அப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மருத்துவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி