ஆப்நகரம்

பெங்களூர் பயங்கர சத்தம்., வெளியானது காரணம்!

பெங்களூரில் ஏற்பட்ட சத்தம் ஏலியன்ஸ்களால் ஏற்படுத்தப்பட்டிருக்குமா என சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அரசு விளக்கமளித்துள்ளது...

Samayam Tamil 20 May 2020, 11:40 pm
பெங்களூரில் புதன்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர சத்தம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் பெங்களூர் போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி அந்த சத்தம் விமானத்திலிருந்து வெளியாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
Samayam Tamil பெங்களூர் பயங்கர சத்தம்., வெளியானது காரணம்!
பெங்களூர் பயங்கர சத்தம்., வெளியானது காரணம்!


பெங்களூர் தெற்கு பகுதியில் புதன்கிழமை பிற்பகல் 1: 30 மணியளவில் மக்கள் பலர் உணரும் வகையில் பெரும் சத்தம் ஏற்பட்டது. இந்த சத்தம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

டைம்ஸ் ஆப் இந்தியாவிற்குப் பேட்டியளித்திருந்த முன்னாள் விமானி ஒருவர், "விமானத்தைச் சோதனை செய்யும்போது ஏற்படும் தவறுகள் காரணமாக இதுபோன்ற சத்தம் ஏற்படும்" எனக் கூறியிருந்தார்.

இந்திய விமானப்படை


இந்நிலையில் பெங்களூர் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்திய விமானப்படை வழக்கமாக மேற்கொள்ளும் விமான பயிற்சிகளின் போது ஏற்பட்ட சத்தம்தான் பெங்களூர் தெற்கு பகுதியில் உணரப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகள் நகரத்திற்கு வெளியே பாதுகாப்பான இடங்களிலேதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனக் கூறப்பட்டிருந்தது.

நிலநடுக்கமா? இடியா? அதிவேக விமானமா? பெங்களூருவில் கேட்ட பயங்கர சத்தம் - பின்னணி என்ன?

மேலும் அதில், "இதுபோன்ற சத்தம் விமானத்தை சூப்பர் சோனிக் வேகத்திலிருந்து, சப் சோனிக் வேகத்திற்கு மாற்றும்போது ஏற்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த சத்தம் என்னவாக இருக்கும் என நெட்டிசன்கள் விவாதித்து வந்த நிலையில் போக்குவரத்துத் துறையின் விளக்கம் அனைவரையும் தெளிவுபெற செய்துள்ளது.

அடுத்த செய்தி