டெல்லி: ஆதார் எண் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசின் அனைத்து சேவைகளிலும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்றும், மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் வங்கிக் கணக்குகள் தொடங்க ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே வங்கிக் கணக்குகள் உள்ளவர்கள், அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு செய்தால் மட்டுமே மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ரூ.50,000க்கு மேல் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டுமெனில், ஆதார் எண் கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும், அவ்வாறு இணைக்காவிடில் வங்கிக் கணக்குகள் ரத்தாகும் என்றும் அறிவித்துள்ளது.
Bank accounts without Aadhaar card is not valid.
அரசின் அனைத்து சேவைகளிலும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்றும், மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் வங்கிக் கணக்குகள் தொடங்க ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே வங்கிக் கணக்குகள் உள்ளவர்கள், அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு செய்தால் மட்டுமே மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ரூ.50,000க்கு மேல் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டுமெனில், ஆதார் எண் கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும், அவ்வாறு இணைக்காவிடில் வங்கிக் கணக்குகள் ரத்தாகும் என்றும் அறிவித்துள்ளது.
Bank accounts without Aadhaar card is not valid.