ஆப்நகரம்

நாளை வங்கிகள் வேலைநிறுத்தம்

டெல்லியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற அகில இந்திய அளவிலான வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து உடன்பாடு ஏற்படாததால், நாளை வங்கிகள் வேலை நிறுத்தம் நடக்கும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார்.

TNN 21 Aug 2017, 10:23 am
டெல்லியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற அகில இந்திய அளவிலான வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து உடன்பாடு ஏற்படாததால், நாளை வங்கிகள் வேலை நிறுத்தம் நடக்கும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார்.
Samayam Tamil bank strike tomorrow
நாளை வங்கிகள் வேலைநிறுத்தம்


சீர்திருத்தம் என்ற பெயரில் தேசிய வங்கி துறைகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதனை கண்டிக்கும் வகையில் நாட்டில் உள்ள ஒன்பது முக்கிய வங்கியைச் சேர்ந்த ஊழியர்கள் தொழிற்சங்கள் ஒன்றுகூடி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்ககூடாது, உலக போட்டியில் இணைத்து செயல்படக்கூடாது, வங்கி கிளைகளை மூடுவதற்கு முயற்சி செய்யக்கூடாது என்னும் கோரிக்கைகளை முன்வைத்தும் , கிராமப்புற வங்கி கிளைகளை அதிகளவில் தொடங்க வேண்டும் மற்றும் குறைவான வட்டிகளில் கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத்துறை ஆகியவைகளுக்கு கடன் வழங்க முன்வர வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தும் இருந்தனர். ஆனால், அரசு மற்றும் வங்கி நிர்வாகங்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் நாளை நாடுதழுவிய அளவில் வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கவுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார்.
வங்கி வேலை நிறுத்த போரட்டத்தில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதால் வங்கி சேவைகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Bank strike tomorrow

அடுத்த செய்தி