ஆப்நகரம்

வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம்!

ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நாடு முழுதும் வங்கி ஊழியர்கள் வரும் 30, 31 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர்.

Samayam Tamil 12 May 2018, 5:38 am
ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நாடு முழுதும் வங்கி ஊழியர்கள் வரும் 30, 31 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர்.
Samayam Tamil 4


இது குறித்து வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறுகையில்,‘ வங்கி ஊழியர்களுக்கான ஊதிய விகித ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. நவம்பர் மாதத்தில் புதிய ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால் போடாததால், புதிய ஊதிய விகிதம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம்.

கடந்த 5-ந்தேதி மும்பையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. வெறும் 2 சதவீதம் தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனால் நாடு முழுதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி வரும் 30, 31 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
என்றார்.

KOLKATA: United Forum of Bank Unions (UFBU) has threatened to observe two-day bank strike on May 30 and 31 to protest against Indian Banks' Association's measly wage hike offer and delay in wage negotiation.

அடுத்த செய்தி