ஆப்நகரம்

22ம் தேதி நாடு தழுவிய வங்கி பணியாளா்கள் வேலை நிறுத்தம்

வருகிற 22ம் தேதி நாடு தழுவிய அளவில் வங்கி பணியாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனா். நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற உள்ளதால் பண பாிவா்த்தனைகளில் பாதிப்பு இருக்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

TOI Contributor 8 Aug 2017, 1:57 am
வருகிற 22ம் தேதி நாடு தழுவிய அளவில் வங்கி பணியாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனா். நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற உள்ளதால் பண பாிவா்த்தனைகளில் பாதிப்பு இருக்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
Samayam Tamil banking workers strike on august 22
22ம் தேதி நாடு தழுவிய வங்கி பணியாளா்கள் வேலை நிறுத்தம்


பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி பணியாளா்களின் 9 சங்கங்கள் பங்கு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி டெல்லியில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம், விநாயகா் சதுா்த்தி உள்ளிட்ட விழாக்களின் காரணமாக வங்கிகள் மூடப்படும் நிலையில் தற்போது நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதால் வங்கிப்பணிகள் பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Banking Workers strike on August 22

அடுத்த செய்தி