ஆப்நகரம்

சுப்ரீம் கோர்ட் லாயர் ஆகணுமா? அப்போ பார் கவுன்சில் சொல்ற கண்டிஷன கேளுங்க!!

மாநில உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக (லாயர்) பணிபுரிவதற்கான புதிய விதிமுறைகளை, அகில இந்திய பார் கவுன்சில் விரைவில் வகுக்க உள்ளது.

Samayam Tamil 22 Nov 2019, 6:45 pm
இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் நீதித் துறை முக்கியமானதாக கருதப்படுகிறது. சட்டத் திட்டங்கள் வகுக்கப்படும் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளின் பிரதிநிதிகளான எம்பி., எம்எல்ஏக்கள் ஏதேனும் தவறு செய்தாலோ, மக்கள் பிரதிநிதிகளால் வகுக்கப்படும் சட்டத் திட்டங்களை நிறைவேற்றும் அரசு இயந்திரத்தை இயக்கும் அதிகாரிகள் தவறிழைத்தாலோ அவர்களை தண்டிக்கும் உரிமையை நீதிமன்றத்துக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ளது.
Samayam Tamil rk


இதேபோன்று. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளால் வஞ்சிக்கப்படும் பட்சத்தில், பொதுமக்கள் தங்களுக்கு நீதி நாடிச் செல்லும் கடைசி புகலிடமும் நீதிமன்றம் தான்.

இத்தகைய சிறப்புமிக்க நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் பணியாற்றுவதுமே. சட்டம் பயிலும் ஒவ்வொருவரின் இலட்சியமாக இருக்கும்.

வழக்கறிஞர்கள் போராட்டத்தில் உரிய நடவடிக்கை: வைகோ வலியுறுத்தல்

மாவட்ட நீதிமன்றங்கள் தொடங்கி, உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் வரை, ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு ஒருவரின் வயது, கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

இதேபோன்று கீழமை நீதிமன்றங்கள் தொடங்கி. உச்ச நீதிமன்றம் வரை ஒருவர் வழக்கறிஞராக பணியாற்றுவதற்கு புதிய நிபந்தனைகள் அகில இந்திய பார் கவுன்சில் விதித்துள்ளது.

இதன்படி, உயர் நீதிமன்றங்களில் ஒருவர் வழக்கறிஞராக பணியாற்ற வேண்டுமானால், முன்னதாக அவர் மாவட்ட அளவிலான நீதிமன்றங்களில் வழக்கறிஞராக இரண்டாண்டுகள் கட்டாயம் பணியாற்றியிருக்க வேண்டும்.

அகில இந்திய பார் கவுன்சில் தலைவராக தமிழக வழக்கறிஞர் நியமனம்

இதேபோன்று, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற விரும்பும் ஒருவர், மாநில உயர் நீதிமன்றங்களில் குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் கட்டாயம் வழக்கறிஞராக பணிபுரிந்திருக்க வேண்டும் என புதிய வரைவு விதிமுறைகளை அகில இந்திய பார் கவுன்சில் விதித்துள்ளது.

இந்த விதிமுறைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

அடுத்த செய்தி