ஆப்நகரம்

இந்தியாவில் மீண்டும் மாறுவேடத்தில் ''பப்ஜி''..! நாளை முதல் உங்கள் பிளே ஸ்டோரில்

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா கேம் இந்தியாவில் நாளை முதல் அறிமுகமாகிறது.

Samayam Tamil 17 Jun 2021, 4:25 pm
இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்ட பின்னரும் ஏதோதோ நுணுக்கங்களை பயன்படுத்தி ஏற்கனவே இருந்த கணக்குகளை வைத்து நிறையே பேர் விளையாடி வருகின்றனர். தடை செய்யப்பட்ட செயலியை விளையாடுவது சட்ட விரோதமான செயல் என்பதால் வெகுஜன பயனாளர்கள் அதிகாரபூர்வமாக பப்ஜி மீண்டும் பயன்பாட்டுக்கு வராதா என்ற ஏக்கத்தில் இருந்து வந்தனர்.
Samayam Tamil கோப்புப்படம்


இந்நிலையில், தென் கொரியாவின் கிராப்டன் நிறுவனம் ''பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா'' என்ற கேமின் டீசரை வெளியிட்டு இந்திய பப்ஜி பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது. அதனை தொடர்ந்து, இச்செயலி ஜூன் 18ம் தேதி பிளே ஸ்ட்ரோலில் வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில் ஆண்டிராய்டு வெர்சனுக்கு மட்டும் முன் பதிவு விண்ணப்பத்தை கிராப்டன் நிறுவனம் வெளியிட்டது.

அதனை தொடர்ந்து நேற்று பிளே ஸ்டோரில் இந்த கேம் சோதனையோட்டமாக பதிவிறக்கம் செய்து விளையாடத்தக்க வகையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஏற்கனேவே அறிவித்ததன்படி நாளை முதல் (ஜூன் 18) முழு பயன்பாட்டுக்கு ''பேட்டல் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா'' கேம் வரவுள்ளது.

ஒரு பைசா கூட தரல: மத்திய அரசு மீது முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

பிளே ஸ்டோரில் மட்டும் இடம்பெற்றுள்ள இந்த கேமை ஆண்டிராய்டு செல்போன் பயனர்கள் பதிவிறக்கம் செய்து விளையாடலாம். விரைவில் ஐஃபோன் பயனர்களுக்கான வெர்சனை குறித்து கிராப்டன் நிறுவனம் அறிவிக்க வாய்ப்புள்ளது.

அடுத்த செய்தி