ஆப்நகரம்

கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 27 Jan 2021, 3:46 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil Sourav Ganguly


கங்குலிக்கு நேற்று இரவு உடல்நிலையில் அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று மதியம் அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கோட்டை உச்சியில் ஏறிய விவசாயிகள்; வெடித்தது கலவரம் - போர்க்களமான டெல்லி!
இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஏற்கெனவே இம்மாதம் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதால் வுட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

வுட்லண்ட்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கங்குலி, வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஒரு அடைப்பை நீக்குவதற்காக ஸ்டெண்ட் வைக்கப்பட்டது.

டெல்லியில் 144 தடை உத்தரவு: எவ்வளவு நாள் தெரியுமா?
இதன்பின் அவருக்கு மீதமுள்ள ரத்தக் குழாய் அடைப்புகளை நீக்க ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை தேவை இல்லை என மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். மற்ற அடைப்புகளும் நீக்கப்பட்ட பிறகு அடுத்த 3 அல்லது 4 வாரங்களில் கங்குலி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என வுண்டல்ட்ஸ் மருத்துவமனையின் தலைமை செயலாளர் ரூபாலி பாசு தெரிவித்திருந்தார்.

கங்குலி குணமடைந்து வந்த சூழலில் ஜனவரி 7ஆம் தேதியன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது, தான் நலமுடன் இருப்பதாகவும் கங்குலி தெரிவித்திருந்தார். கங்குலிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகடிவ் ரிசல்ட் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி