செம வேகத்தில் பரவும் பறவைக் காய்ச்சல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அலர்ட்!
பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil 7 Jan 2021, 11:35 pm
நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் திடீரென பறவைக் காய்ச்சல் பரவி வருவது உறுதியாகியுள்ளது. இதுவரை கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எந்தவொரு சூழலையும் சந்திக்க மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போதிய அளவுக்கு PPE கிட்கள் இருப்பதை உறுதிசெய்யும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பறவைகளை கொலை செய்வதற்கு தேவையான உபகரணங்கள் இருப்பதையும் உறுதிசெய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது. சரியாக வேகவைத்தபிறகு அல்லது சமைத்தபிறகு கோழி இறைச்சி, வாத்து இறைச்சி மற்றும் முட்டைகளை சாப்பிடலாம் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பது குறித்து மத்திய கால்நடைத் துறை செயலாளர் தலைமையில் மாநில அரசுகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், வைரஸ் தடுப்பு குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
பறவைக் காய்ச்சல் பரவி வரும் காலகட்டத்தில், இறைச்சி மற்றும் முட்டை பயன்பாடு தொடர்பாக பரவும் வதந்திகளை கட்டுப்படுத்தவும், சமைத்த உணவின் பாதுகாப்பு குறித்து பண்ணை உரிமையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநில அரசுகளிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், எந்தவொரு சூழலையும் சந்திக்க மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போதிய அளவுக்கு PPE கிட்கள் இருப்பதை உறுதிசெய்யும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பறவைகளை கொலை செய்வதற்கு தேவையான உபகரணங்கள் இருப்பதையும் உறுதிசெய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது. சரியாக வேகவைத்தபிறகு அல்லது சமைத்தபிறகு கோழி இறைச்சி, வாத்து இறைச்சி மற்றும் முட்டைகளை சாப்பிடலாம் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பது குறித்து மத்திய கால்நடைத் துறை செயலாளர் தலைமையில் மாநில அரசுகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், வைரஸ் தடுப்பு குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
பறவைக் காய்ச்சல் பரவி வரும் காலகட்டத்தில், இறைச்சி மற்றும் முட்டை பயன்பாடு தொடர்பாக பரவும் வதந்திகளை கட்டுப்படுத்தவும், சமைத்த உணவின் பாதுகாப்பு குறித்து பண்ணை உரிமையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநில அரசுகளிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.