ஆப்நகரம்

''கரடிக்கு சோக்கு கேட்குதோ''... செல்ஃபி ராணிகளை ரணகளப்படுத்திய கரடி...

கரடியுடன் செல்பி எடுக்கும் பெண்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 22 Jul 2020, 2:51 pm
மெக்ஸிகோவில் உள்ள பிரபலமான சிபின்க் சுற்றுச்சூழல் பூங்காவில் நடைபயணம் மேற்கொண்ட சில பெண்கள் ஆங்காங்கே நின்றுகொண்டு செல்பி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு கரடி வந்தது. ஆனால் அந்த பெண்கள் தப்பியோடாமல் அங்கேயே அசைவற்று நிற்க, அந்த கரடி ஒரு பெண்ணை முகர்ந்து கொண்டே, செல்ஃபிக்கு போஸ் கொடுக்கும் விதமாக இரண்டு காலில் ஏறி நிற்கிறது.
Samayam Tamil bear selfie



சிறிது நேரம் கழித்து அந்த கரடி அங்கிருந்து நகர்ந்ததும். அந்த பெண் தனது வாகனத்தை நோக்கி ஓடி வருகிறார். இந்த வீடியோ தற்போது சமுக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. சிங்கிளாக பூங்காவை சுற்றி வரும் அந்த கரடி பெண்களை கண்டதும் பழகி செல்லும் காட்சிகளை, நெட்டிசன்கள் கலாய்த்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


நல்லா யூஸ் பண்ணிட்டு இப்படி செஞ்சிட்டாங்களே போலீசார் - கதறும் விகாஸ் துபே மனைவி!

மேலும், பியர் செல்ஃபி என்ற ஹாஷ்டேகுடன் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். '' பூங்காவில் உள்ள கரடி என்பதால் அதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கலாம். இதேபோன்று இன்னொருமுறை செல்பி எடுக்க முயலாமல், தப்பி செல்ல முயலுங்கள்'' என சிலர் செல்ஃபி ராணிகளுக்கு அலெர்ட் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி