ஆப்நகரம்

மென்பொறியாளர் ஏமாற்றி ரூ. 60 லட்சம் மோசடி செய்த சீரியல் நடிகர் மற்றும் மனைவி கைது

சமூகவலைதளம் வழியாக மென்பொறியாளரை ஏமாற்றி ரூ. 60 லட்சம் வரை மோசடி செய்த சீரியல் நடிகர் மற்றும் அவரது மனைவியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 27 Jun 2018, 6:10 pm
சமூகவலைதளம் வழியாக மென்பொறியாளரை ஏமாற்றி ரூ. 60 லட்சம் வரை மோசடி செய்த சீரியல் நடிகர் மற்றும் அவரது மனைவியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil 64758820


கொல்கத்தாவில்ரூபாளி மசும்தர் என்ற 39 வயது பெண்ணும் அவரது கணவர் மற்றும் டிவி சீரியலர்நடிகருமான குஷன் மசும்தர் வசித்துவருகின்றனர்.48 வயதான குஷன் பொங்ளூரில் சிரியல் நடிகராக பணியற்றினார். சத்பக் பாடா, குருஷேத்திரா, பால பதலின்போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் குஷன். இவருக்கு சமீப காலமாக சீரியல் வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை . இதனால் அவர்கள் இருவரும் வருமானத்திற்காக மோசடியில் இறங்கியுள்ளனர்.

குஷனின் மனைவி ரூபாளி அழகிய மாடல்களின் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வார் . அதன் பின்பு அந்த புகைப்படங்களை தனது புரோபையில் புகைப்படமாக அப்டேட் செய்து டேட்டிங் இணைதளத்தில் பதிவேற்றம் செய்வார். மேலும் டேடிங் இணையதளத்தில் உள்ள இவரது ஆன்லையின் நண்பர்களிடம் ஒரு பொய்யன தகவலை தெரிவித்து பணம் கேட்ப்பார் .

இதுபோலாவே பெங்களூரை சேர்ந்த மென்பொருள் ஆய்வாளர் ஒருவரிடம் இவர் ஏமாற்றி ரூ. 6 லட்ச ரூபய் வாங்கியுள்ளார். அவர் ’Shompa76; என்ற பெயரில் இவரை ஏமாற்றி உள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது இருவரையும் சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி