ஆப்நகரம்

குளோபல் ஒலிம்பியாட்டிற்கு தேர்வாகியுள்ள பெங்களூரு சிறுவன்!

ஒலிம்பியாட்டில் தேர்வான சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

Samayam Tamil 16 May 2018, 8:10 pm
பெங்களூரு: ஒலிம்பியாட்டில் தேர்வான சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
Samayam Tamil Olympiad


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மணிராம் ஹோம் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ராம்சந்திரா கிஷோர் ஆப்தே. இவன் ஜப்பான் நாட்டின் சுகுபாவில் நடைபெறவிருக்கும் 2018ன் சர்வதேச இன்பர்மேடிக்ஸ் ஒலிம்பியாட்டிற்கு தேர்வாகியுள்ளான்.

இவன் இந்தியா சார்பில் பங்கேற்கும் நான்கு நபர்களில் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்சந்திரா ஹிந்தி, பியானோவிற்காக தனிவகுப்பு சென்று வருகிறார். ஆனால் அறிவியல் மறும் கணிதத்தை விட்டிலேயே கற்றுக் கொள்கிறார்.

இதுதொடர்பாக ராம்சந்திரா கிஷோர் பேசுகையில், நாள்தோறும் 5 முதல் 6 மணி நேரம் படிப்பதாக தெரிவித்துள்ளார். ஒலிம்பியாட் சமயத்தில் மேலும் 2 மணி நேரம் படிப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க கணிதப் போட்டியில் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 30 முதல் மே 9 வரையிலான சென்னை கணிதவியல் நிறுவனத்தின் பயிற்சிப் பட்டறைக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Bengaluru boy enters global Olympiad.

அடுத்த செய்தி