ஆப்நகரம்

உண்டியல் சேமிப்பை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கிய 8 வயது சிறுவன்!

பெங்களூரு: கஜா புயல் நிவாரணத்திற்கு தனது சேமிப்பை சிறுவன் ஒருவர் வழங்கி உள்ளான்.

Samayam Tamil 22 Nov 2018, 5:59 pm
தமிழகத்தை தாக்கிய கஜா புயல் காரணமாக 7 தமிழக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கால்நடைகள், லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள், பல்வேறு வகையான மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil Gaja Boy


அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்களுக்கு அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவி புரிந்து வருகின்றன. இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த வேதிக்(8) என்ற சிறுவன் கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு உதவ முன்வந்துள்ளான்.

அவனுடைய தாய், சென்னையில் வசிக்கும் தோழி ஏஞ்சலின் சோபியா உடன் பேசியதை கேட்டுள்ளார். அதன்மூலம் கஜா புயல் பாதிப்புகளை உணர்ந்து கொண்டு, தனது உண்டியல் சேமிப்பை அப்படியே வழங்குவதாக அறிவித்துள்ளார்.

அவர் ரூ.763 சேமித்து வைத்துள்ளார். இதனை ஏஞ்சலின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஏஞ்சலின் சோபியா, வேதிக் புகைப்படத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.

ஆனால் விளம்பரமாக இருக்கும் என்று தோழி மறுத்துள்ளார். இருப்பினும் பிற சிறுவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று சமாதானம் செய்து புகைப்படம் பெற்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி