ஆப்நகரம்

பெங்களூர் ரெஸ்டாரண்ட்டில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

பெங்களூர் ரெஸ்டாரண்ட் ஒன்றில் மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

Samayam Tamil 8 Jan 2018, 8:25 pm
பெங்களூர் ரெஸ்டாரண்ட் ஒன்றில் மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
Samayam Tamil bengaluru fire five die as fire breaks out at restaurant
பெங்களூர் ரெஸ்டாரண்ட்டில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி


பெங்களூரில் உள்ள மதுபான ரெஸ்டாரண்ட் ஒன்றில் இன்று அதிகாலை மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்தபோது ரெஸ்டாரண்ட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் சுவாமி (23), பிரசாத் (20), மகேஷ் (35), மஞ்சுநாத் (45), கீர்த்தி (24) ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மீட்புப்படையினர் நிலைமை தீ பரவுவதைத் தடுத்தனர். அவர்கள் நடத்திய ஆய்வில் ரெஸ்ட்ராண்டில் தீ விபத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை வசதிகள் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் தப்பி ஓடிய ரெஸ்ட்ராண்ட் நிறுவனரையும் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி