ஆப்நகரம்

ஊரடங்கில் இப்படியொரு முன்னேற்றம்- ஒட்டுமொத்தமாக மாறிய பெங்களூரு மக்கள்!

பெங்களூருவில் கண்ட இடங்களில் குப்பைகள் கொட்டும் பழக்கம் ஊரடங்கால் பெரிதும் குறைந்திருப்பது மாநகராட்சி அதிகாரிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Samayam Tamil 23 Apr 2020, 4:05 pm
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அவ்வப்போது வெளியே வந்து செல்கின்றனர். இந்நிலையில் குப்பைகளால் ஏற்படும் சுமை 23 சதவீதம் குறைந்திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 3,990 டன் குப்பைகள் வெளியேற்றப்பட்டு வந்தன. ஆனால் ஏப்ரல் மாதம் 3,070 டன்களாக குறைந்துள்ளது. கண்ட இடங்களில் குப்பைகள் கொட்டும் பழக்கம் 90 சதவீதம் குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
Samayam Tamil பெங்களூருவில் ஊரடங்கு


இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், முன்னதாக எங்களின் குப்பை சேகரிக்கும் வண்டிகள் வரும் நேரம் பொதுமக்களுக்கு உகந்ததாக இல்லை. இதனால் திறந்த வெளிகளில், வெற்றிடங்களில் குப்பைகளைக் கொட்டி விட்டுச் செல்கின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் அனைவரும் தங்கள் வீடுகளில் இருக்கின்றனர்.

முதல்முறை அதுவும் இத்தனை டன் காய்கறிகள்; ஊரடங்கில் புதிய அச்சாரம் போட்ட வாரணாசி!

இதனால் குப்பை வண்டி வரும் நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குப்பைகளை அப்புறப்படுத்தி விடுகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களின் அளவு குறைந்துள்ளது. அவர்களின் கடைகளில் வாங்கும் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். பெங்களூரு நகரின் குப்பை சேகரிக்கும் கிடங்குகளான கன்னஹள்ளி, சிக்கனகமன்கலா, தொட்டபிடரகல்லு, கேசிடிசி, சீகேஹள்ளி, எம்.எஸ்.ஜி.பி மற்றும் மிட்டகனஹள்ளி ஆகியவற்றில் குப்பைகளின் அளவு குறைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இந்த கிடங்குகளுக்கு ஒவ்வொரு நாளும் 615 டன் குப்பைகள் வந்து சேர்ந்த நிலையில், நடப்பு மாதத்தில் 505 டன் குப்பைகள் மட்டுமே வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் கலப்படமான குப்பைகள் 3,375 டன்கள் வந்துள்ளன. ஆனால் நடப்பு மாதத்தில் 2,565 டன்னாக குறைந்துள்ளது. இதுபற்றி திடக் கழிவு மேலாண்மை சுற்றுவட்ட உறுப்பின ராமாகாந்த் கூறுகையில், கல்யாண மண்டபங்கள், ஓட்டல்கள் செயல்படாததால் குப்பைகள் பெரிதும் குறைந்துள்ளன.

ஆனால் குப்பைகள் தரம் பிரிப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனை அனைவரும் தங்கள் வீடுகளிலே பின்பற்ற தொடங்க வேண்டும் என்றார். கக்கதாசபுராவைச் சேர்ந்த ஷீலா கிரண் குமார் கூறுகையில், எங்கள் பகுதியில் கண்ட இடங்களில் குப்பை கொட்டுவது பெரிதும் குறைந்துள்ளது. முன்னதாக 100க்கும் மேற்பட்ட இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது.

இந்த சேவைகளுக்கு அனுமதி- ஊரடங்கில் சலுகை; கர்நாடகாவில் இன்று முதல் அமலாகிறது!

தற்போது ஓரிரு இடங்களில் மட்டுமே குப்பைகள் தென்படுகின்றன என்றார். இதேபோல் கெசவனஹள்ளியை சேர்ந்த பார்வதி ரமேஷ்யும் குப்பைகள் அதிகமில்லாமல் இருப்பதை எண்ணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திற்கு தனது நன்றி தெரிவித்தார்.

அடுத்த செய்தி