ஆப்நகரம்

கோடையில் இருமடங்கு மழை; வெப்பம் தணிந்து தண்ணீரில் தத்தளிக்கும் பெங்களூரு!

வழக்கத்தை விட இருமடங்கு மழையை பெங்களூரு நகரம் பெற்றுள்ளது.

Samayam Tamil 14 May 2018, 5:41 pm
பெங்களூரு: வழக்கத்தை விட இருமடங்கு மழையை பெங்களூரு நகரம் பெற்றுள்ளது.
Samayam Tamil Bangalore Rains
பெங்களூருவில் கனமழை


தென்மேற்குப் பருவமழை இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் கோடை மழை பெங்களூருவில் வெளுத்து வாங்கி வருகிறது. நாள்தோறும் பெய்து வரும் மழையால், வழக்கத்தை விட இருமடங்கு மழையை நகரம் பெற்றுள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், கடந்த மார்ச் 1ல் இருந்து பெங்களூரு 207மிமீ மழைப்பொழிவை பெற்றுள்ளது. வழக்கமாக 115 மிமீ என்ற அளவிற்கே மழைப்பொழிவை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை நேர மழையால், பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். ஆனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம், மின் இணைப்புபெங்களூருவில் கனமழைதுண்டிப்பு, போக்குவரத்து நெரிசல், மரங்கள் முறிந்து விழுதல் போன்றவற்றால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

நிலப்பகுதியில் வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி மழைப்பொழிவிற்கு வித்திடுகிறது. கர்நாடகாவின் தெற்கு உட்பகுதியில் அடுத்த 4-5 நாட்களுக்கு மழை தொடரும். கேரளாவில் வரும் ஜூன் 1ல் பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையத்தின் சிஎஸ் படில் தெரிவித்துள்ளார். பெங்களூருவின் மேற்கு, தெற்கு பகுதிகளில் ஞாயிறு அன்று மழை வெளுத்து வாங்கியது.

ராஜராஜேஸ்வரி நகர், தீபாஞ்சலி நகர், மைசூரு ரோடு, நகர்பவி, கெங்கேரி ஆகிய பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன. நகரின் மத்திய, கிழக்கு, வடக்குப் பகுதிகளான எம்.ஜி ரோடு, பெல்லந்தூர், கொடிகெஹள்ளி, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளது.

கர்நாடகா மாநில இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் கூறுகையில், பெங்களூரு நகர்ப்புறங்களில் 50 மிமீ மழையும், பெங்களூரு கிராமப்புறங்களில் 40 மிமீ மழையும் பதிவாகியுள்ளன.

மரக்கிளைகள் முறிந்து விழுதல் தொடர்பாக விஜயாநகர், நகர்பவி, கேபி அக்ரஹாரா, மல்லேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து 15 புகார்கள் வந்துள்ளதாக பிபிஎம்பி கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Bengaluru got double the rain than normal this summer.

அடுத்த செய்தி