ஆப்நகரம்

ஸ்பீக்கரை அலறவிட்டதால் தசரா கொண்டாட்டத்தில் அடிதடி

நவராத்திரி கொண்டாட்டத்தின் போது ஸ்பீக்கர்களில் பாடல்களை ஒலிக்கச் செய்யும்போது ஒலி அளவைக் குறைவாக வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். அதனை மீறி ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம் என போலீசார் கூறுகின்றனர்.

Samayam Tamil 20 Oct 2018, 11:33 am
பெங்களூரில் குடியிருப்பு ஒன்றில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் ஸ்பீக்கரில் பாடல்களை அதிக சத்தத்துடன் அலறவிட்டதால் அடிதடி ஏற்பட்டது.
Samayam Tamil sonu-nigam


கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒயில்பீல்டுக்கு அருகே உள்ள சன்னசந்திராவில் இருக்கும் இஷா மிஸ்டி என்ற குடியிருப்பில் வியாழக்கிழமை இரவு துர்கா பூஜை கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது. இதற்காக ஸ்பீக்கர்களில் பாடல்களை சத்தமாக ஒலிக்கசெய்துள்ளனர். இதனால் எரிச்சலடைந்தவர்கள் பலர் அந்த குடியிருப்பில் திடீரென் நுழைந்து தாக்கியுள்ளானர்.

சுமார் 90 மணிக்கு கிட்டத்தட்ட 50 பேர் கொண்ட கும்பல் குடியிருப்பிற்குள் புகுந்து ஸ்பீக்கர்களையும் விளக்குகளையும் அடித்து நொறுக்கியதாகவும் குழந்தைகள் உட்பட சிலரைத் தாக்கி காயப்படுத்தியதாகவும் அங்கு வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாக்கியவர்களைக் அடையாளம் கண்டுவிட்டதாகவும் விரைவில் அவர்களைக் கைது செய்வோம் என்றும் கடுகோடி போலீசார் கூறுகின்றனர்.

“இப்பகுதியில் உள்ளவர்களை நவராத்திரி கொண்டாட்டத்தின் போது ஸ்பீக்கர்களில் பாடல்களை ஒலிக்கச் செய்யும்போது ஒலி அளவைக் குறைவாக வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். அதனை மீறி ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம்” எனவும் போலீசார் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி