ஆப்நகரம்

பெங்களூரில் வெள்ளம் வரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த 24 ணி நேரத்தில் பெங்களூரில் வெள்ளப் பெருக்கு ஏற்பக்கூடும் என்று கர்நாடக மாநில வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Samayam Tamil 4 Jun 2018, 7:56 pm
அடுத்த 24 ணி நேரத்தில் பெங்களூரில் வெள்ளப் பெருக்கு ஏற்பக்கூடும் என்று கர்நாடக மாநில வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Samayam Tamil rain-e1508133816516


தென் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. வெப்ப சலனம் காரணமாகவும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

கர்நாடகாவின் பெங்களூரு நகரிலும் தமிழ்நாட்டில் கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூரில் அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ள பெருக்கு ஆபத்து உள்ளதாக அம்மாநில வானிலை மையம் மற்றும் மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் ஆகியவை எச்சரித்துள்ளன.

பெங்களூரு நகரில் தாழ்வானப் பகுதிகளான ராஜராஜேஸ்வரி நகர், கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மகாதேவபுரா மற்றும் பொம்மனஹல்லி ஆகிய 5 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தினமும் பகல் 2 மணிக்குப் பிறகு மழை பெய்யும் என்றும் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி