ஆப்நகரம்

இணையதள விளம்பரத்தால் வந்த விபரீதம்!

இணையத்தில் விளம்பரம் செய்தவரை வாடிக்கையாளர் போல நடத்து கொலை செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

TNN 13 Aug 2016, 5:53 pm
பெங்களூரு: இணையத்தில் விளம்பரம் செய்தவரை வாடிக்கையாளர் போல நடத்து கொலை செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
Samayam Tamil bengaluru techie advertises bike online man poses as customer poisons him
இணையதள விளம்பரத்தால் வந்த விபரீதம்!


பெங்களூரைச் சேர்ந்த சோஹன் என்பவர் பிரபல விளம்பர இணையதளம் ஒன்றில் தனது பைக்கை விற்கவுள்ளதாக விளம்பரம் செய்துள்ளார். அதனைப் பாரத்துவிட்டு பைக்கை வாங்குவதாக கூறி சோஹனின் வீட்டுக்கு வந்துள்ளார். பைக்கை விலை பேசிமுடித்த பிறகு இருவருமாக மது அருந்தியுள்ளனர்.

அப்போது, பைக் வாங்குவதாக கூறிய நபர் சோஹன் அருந்திய மதுவில் சயனைடை கலந்து அவரைக் கொன்றுவிட்டு பைக்கை திருடிச்சென்றுள்ளார். மேலும், அவரது பைர்ஸையும் திருடிச்சென்ற அவர் பர்ஸிலேயே இருந்த ஏடிஎம் பின் நம்பரை வைத்து ரூ.27 ஆயிரத்தையும் எடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குப் பிறகு சோஹர் அலுவலகத்திற்கு வராததால் அவரது வீட்டிற்கு வந்து பார்த்த நண்பர்கள் சோஹர் இறந்து கிடப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சோஹரைக் கொன்றவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கார்த்திக் என்று தெரியவந்துள்ளது. மேலும், மருத்துவப் பரிசோதனை நடத்திய பிறகு சோஹர் மதுவில் சயனைடு கலந்து கொல்லப்பட்டதும் தெரிந்துள்ளது.

இதனையடுத்து, காவல்துறையினர் எடுத்த உடனடி நடவடிக்கையால் ராஜாஜி நகர் பகுதியில் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கெனவே வங்கியில் கொள்ளை அடிக்க முயற்சி செய்தது, நடைக்கடையில் தங்கத்தைத் திருடியது உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி