ஆப்நகரம்

முகநூலுக்கு அடிமையான மனைவி, கணவன் தற்கொலை!

மனைவி முகநூலக்கு அடிமையானதால், கணவன் மற்றும் மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Jun 2018, 1:53 pm
மனைவி முகநூலக்கு அடிமையானதால், கணவன் மற்றும் மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 64551520


பெங்களூருவில் உள்ள பகல்குண்ட் என்ற பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் அனூப்(28) என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வசித்துவந்தார். இவர் கோழிப்பண்ணையில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தார்.இவருக்கு திருமணமாகி செளமியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஆறு மாதத்தில்ஒரு மகன் இருக்கிறான்.

செளமியா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதால், முகநூலில் அதிக நேரம் செலவிடுவதாக தொிகிறது. இருவரும் ஒன்றாக இருக்கும்போது, செளமியா முகநூலில் அதிக நேரம் செலவிடுவது அனூப்பிற்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

இருவரும் தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய நாளில் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமானதால், செளமியாவின் சகோதரர் ரவிசந்திரனுக்கு தொலைபேசியில் அழைத்து, அவரது தங்கையை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார் அனூப். ரவிந்திரன் சமாதானம் செய்தபிறகு, அவர் சண்டையை நிறுத்திகொள்வதாக கூறியிருக்கிறார். ஆனால் அடுத்த நாள் காலை பிரச்சனை மோசமடைந்ததாகவும், உடனேபெங்களூருவிற்கு வருமாறு ரவிசந்திரனிடம் செளமியா கூறியுள்ளார். உடனடியாக வருவதாக கூறிய ரவிசந்திரன் மதியம் 1.30 மணிக்கு பெங்களூருவுக்குசென்றுள்ளார்.

வீட்டின் கதவை தட்டிபோது யாரும் வராததால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளனா். அப்போது செளமியா மற்றும் அனூப் வெவ்வேறு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதுதெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி