ஆப்நகரம்

பெங்களூரில் நாயின் கண் எதிரே தனது 8 குட்டிகள் கல்லால் அடித்து கொலை

பெங்களூரில் பெண் ஒருவர் நாய்க்கு பாடம் புகட்டுவதாக கூறி 8 நாய்க்குட்டிகளை தன் தாயின் கண் எதிரே கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 23 Mar 2016, 7:49 pm
பெங்களூரு: பெங்களூரில் பெண் ஒருவர் நாய்க்கு பாடம் புகட்டுவதாக கூறி 8 நாய்க்குட்டிகளை தன் தாயின் கண் எதிரே கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil bengaluru woman kills 8 puppies in front of their mother just to teach the dog a brutal lesson
பெங்களூரில் நாயின் கண் எதிரே தனது 8 குட்டிகள் கல்லால் அடித்து கொலை




பெங்களூர் கிருஷ்ணா நகரில் முன்னாள் விமான படை லெப்டினன்டின் மனைவி பொன்னமா வசித்து வருகிறார். அதே பகுதியில் 4 வயதான அம்மு என்கிற தெரு நாய் வசித்து வந்தது . அம்முவிற்கு 8 நாய்குட்டிகள் பிறந்தது.

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அம்முவை வீட்டின் வெளியே நிக்கவைத்து, அதன் கண் எதிரே 8 நாய்குட்டிகளையும் கல்லால் கொடூரமாக தாக்கியுள்ளார் பொன்னமா. இதில் 7 நாய்குட்டிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தன. படுகாயமடைந்த ஒரு நாய்குட்டி அடுத்த நாள் உயிர் இழந்தது.இதனைக் கேள்விபட்ட அக்கம் பக்கத்தினர் , இறந்த நாய்குட்டிகளை புதைத்தோடு, காவல்துறையிடம் புகார் அளித்தனர். இது குறித்து பீனையா காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இது குறித்து பொன்னமா கூறுகையில், தனது வீட்டின் அருகே அம்மு குட்டிகளை ஈன்றதாகவும், குப்பைகளை கொண்டுவந்து போடுவதாகவும், இதனால் அம்முவிற்கு பாடம் புகட்டவே இவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.



இது குறித்து பீனையா பகுதி இன்ஸ்பெக்டர் அய்யனா ரெட்டி கூறுகையில், பொன்னமாவை கைது செய்து பின்னர் ஜாமின் வெளியே வந்துள்ளார். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

இதற்கிடையே அம்மு, தனது பிள்ளைகள் இறந்த இடத்தை கடந்த 5 நாட்களாக சுற்றி சுற்றி தேடி வருகிறது. எல்லா உயிரினங்களுக்கும் தாய் பாசம் என்பது ஒன்றுதான். அதை பிரித்து பார்க்க முடியாது.

அடுத்த செய்தி