ஆப்நகரம்

அழிந்து போன காட்டை மீண்டும் உருவாக்கிய அதிசய பெண்மனி!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்மனி ஒருவர், தன்னுடைய சொந்த முயற்சியால் அழிந்து போன காட்டை மீண்டும் உருவாக்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Jun 2018, 1:38 pm
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்மனி ஒருவர், தன்னுடைய சொந்த முயற்சியால் அழிந்து போன காட்டை மீண்டும் உருவாக்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil அழிந்து போன காட்டை மீண்டும் உருவாக்கிய அதிசய பெண்மனி!
அழிந்து போன காட்டை மீண்டும் உருவாக்கிய அதிசய பெண்மனி!


ஒடிசா மாநிலம் மாயூர்பஞ்ச் தகுர்முண்டா வனப்பகுதியில் வசித்து வருபவர் பெங்கோ. இவரது கணவர் நினைவாக ருத்ரா பலேயின் நினைவாக இந்த காட்டிற்கு ’ருத்ராபாணா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த பெயருக்கு பின்னால் ஒரு சுவாரசிய வரலாறு மறைந்திருக்கிறது.

காட்டில் பிறந்து, காடுகளிலேயே வாழ்ந்துவரும் பெங்கோவுக்கு மரக்கடத்தல்க்காரர்கள் பேரதிர்ச்சி காத்திருந்தது. இவர் வாழ்ந்த வனப்பகுதியில் 1980க்குப் பின்னர் மரம் வெட்டிகளால் ஒரு மரம் கூட இல்லாத நிலை உருவாகியது.


இதனால் மனமுடைந்த பெங்கோ, தனது கணவர் ருத்ரா பலேயுடன் இணைந்து மீண்டும் காட்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இருவரும் இணைந்து வெட்டிய மரங்கள் இருந்த இடத்திலேயே மீண்டும் விதைகளை நட்டனர்.

மழைநீர் பட்டு விதைகளில் இருந்து வந்த துளிர்கள் இந்த தம்பதிக்கு நம்பிக்கையை அளித்தன. இதனிடையே தனது கணவரும் இறந்துவிட, மனம் தளராத பெங்கோ, தனது முழு வாழ்க்கையையும் வனத்திற்காகவே அர்ப்பணித்து விட்டார். இன்று மீண்டும் மரங்களுடன் காட்சியளிக்கும் அந்த வனத்தை பராமரித்து வரும் இவர் ஒரு இலையைக் கூட பறிக்க யாரையும் அனுமதிப்பதில்லை.


நான்கு குழந்தைகளின் தாயான இவருக்கு, அரசாங்கத்திடமிருந்து மாதம் 300 ரூபாய் உதவித்தொகை கிடைக்கிறது. மேலும் இலைகளிலிருந்து தட்டுகள் செய்வதன் மூலம் பணம் சம்பாதித்து தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்.

காட்டின் ராணியாக வலம்வரும், பெங்கோவின் ஒரே கோரிக்கை, மரக் கடத்தல்க்காரர்களிடமிருந்து வனத்தை பாதுகாக்க வேண்டும், மரக்கடத்தலில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்பதே.!
அழிந்து போன காட்டை மீண்டும் உருவாக்கிய அதிசய பெண்மனி!

அடுத்த செய்தி