ஆப்நகரம்

சாம்பிராணி புகையால் காலமான ஆஸ்துமா நோயாளி

ஆஸ்துமா நோயாளிகள் வீட்டில் உள்ள குப்பையை பெருக்கும்போது குப்பையின் நுண் துகள் சுவாசத்துடன் நுரையீரலுக்குச் சென்றாலும் ஆபத்துதான். பெங்களூருவில் ஆஸ்துமா நோய் உள்ள ஒரு பெண், சாம்பிராணி வாசனையை நுகர்ந்ததால் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Samayam Tamil 18 May 2019, 3:33 pm
ஆஸ்துமா நோயாளிகள் வீட்டில் உள்ள குப்பையை பெருக்கும்போது குப்பையின் நுண் துகள் சுவாசத்துடன் நுரையீரலுக்குச் சென்றாலும் ஆபத்துதான். பொது இடங்களில் வாகன புகை சுவாத்துடன் உள்ளே செல்லாமல் இருக்க மாஸ்க் அணிந்துகொள்வர்.
Samayam Tamil 91279_thumb


சாம்பிராணி உள்ளிட்ட வாசனை பொருட்களின் இருந்து வரும் புகை கூட அவர்களது நுரையீரலின் ’பிராங்கைடீஸ்’ பகுதியில் அடைப்பை உண்டாக்கும்.

இந்நிலையில் தற்போது பெங்களூருவில் ஆஸ்துமா நோய் உள்ள ஒரு பெண், சாம்பிராணி வாசனையை நுகர்ந்ததால் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்தவர் லாவண்யா(25) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). அறிவியல் பாடப்பிரிவில் முதல் மாணவியாக விளங்கிய இவர் பி.எட்., பட்டம் பெற்றார். உதவி பேராசிரியராக கல்லூரியில் சேர இருந்தார்.

கடந்த மே 12 அன்று லாவண்யாவின் பெற்றோர் தங்கள் வீட்டில் பூஜை செய்துள்ளனர். இதில் பென்சலின் வேதிப்பொருள் கொண்ட வாசனை பத்தி ஏற்றப்பட்டுள்ளது. ஜன்னல் கதவுகளை மூடாமல் பூஜை செய்ததால் புகை வெளியேறவில்லை.

லாவண்யா ஏற்கனவே வீசிங், ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார். வீட்டுக்குள் புகை இருப்பது தெரியாமல் லாவண்யா உள்ளே நுழைய, அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது.

குளியலறைக்கு செல்ல முயன்றார். அப்போது மயங்கி விழுந்தார். உடனே பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மூச்சுத்திணறல் காரணமாக வெண்டிலேட்டருக்கு மாற்றப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவக்குழு, மூளைக்கு சரியான ஆக்ஸிஜன் கிடைக்காததால் அவர் மூளை செயலிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

நான்கு நாட்கள் கழித்து சிகிச்சைபலன் இன்றி லாவண்யா தன் கடைசி மூச்சை வெளியேற்றி காலாமானார். இச்சம்பவம் வைரலாகியுள்ளது.

அடுத்த செய்தி