மும்பை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அரசுப் போக்குவரத்து கழகமான பெஸ்ட்(BEST)ல் இடம்பெற்றுள்ள தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அவர்கள் சம்பள உயர்வு, முதல் வாரத்தில் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து பலமுறை நிர்வாகத்திடன் கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக பெஸ்ட் தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஷஷங் ராவ் கூறியுள்ளார். இந்தப் போராட்டத்தில் 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 36,000 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
3,800 பேருந்துகள் டிப்போக்களில் முடங்கியுள்ளன. இதனால் 30 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Maharashtra : BEST bus indefinite strike in #Mumbai.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அரசுப் போக்குவரத்து கழகமான பெஸ்ட்(BEST)ல் இடம்பெற்றுள்ள தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அவர்கள் சம்பள உயர்வு, முதல் வாரத்தில் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து பலமுறை நிர்வாகத்திடன் கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக பெஸ்ட் தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஷஷங் ராவ் கூறியுள்ளார். இந்தப் போராட்டத்தில் 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 36,000 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
3,800 பேருந்துகள் டிப்போக்களில் முடங்கியுள்ளன. இதனால் 30 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Maharashtra : BEST bus indefinite strike in #Mumbai.