ஆப்நகரம்

பாரத ரத்னா சச்சினையே அவமானப்படுத்திய மாநிலங்களவை உறுப்பினர்கள்!

மாநிலங்களவையின் கௌரவ உறுப்பினரான சச்சின் டெண்டுல்கரை பேசவிடாமல் மாநிலங்களவை உறுப்பினர்கள் தடுத்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

TNN 21 Dec 2017, 5:35 pm
டெல்லி: மாநிலங்களவையின் கௌரவ உறுப்பினரான சச்சின் டெண்டுல்கரை பேசவிடாமல் மாநிலங்களவை உறுப்பினர்கள் தடுத்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil bharat ratna sachin tendulkar was not allowed to speak in rajya sabha
பாரத ரத்னா சச்சினையே அவமானப்படுத்திய மாநிலங்களவை உறுப்பினர்கள்!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவையில் கௌரவ உறுப்பினராக இருந்து வருகிறார். அவ்வப்போது, மாநிலங்களவை கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், இந்தியாவில் விளையாட்டுத்துறை மற்றும் விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் மற்றும் பிரச்சனைகள் குறித்து பேச அவருக்கு இன்று நேரம் ஒதுக்கப்பட்டது.சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலங்களவையில் சச்சின் பேச இருந்ததால், அவரின் பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

ஆனால், குஜராத் தேர்தலில் மன்மோகன் சிங் பிரச்சாரம் செய்ததற்கு எதிராக கருத்துகள் வந்ததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் கோஷம் எழுப்பினர். இதனால் சச்சின் டெண்டுல்கர் பேசமுடியாமல் போனது.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பியதால், துணை குடியரசுத் தலைவரும் சபாதலைவருமான வெங்கய்யா நாயுடு அவையைக் கலைத்தார்.

இதைத்தொடர்ந்து, பாரத ரத்னா விருது பெற்ற சச்சின் டெண்டுல்கரை பேசவிடாமல் அமளியில் ஈடுபட்டதற்கு காங்கிரஸ் கட்சியினருக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி