ஆப்நகரம்

ஆர்.டி.ஐ மூலம் கேள்வி கேட்டதற்கு, ஜி.எஸ்.டி வரி வசூலித்ததால் அதிர்ச்சி!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டவருக்கு, வரி வசூல் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Sep 2018, 2:19 am
போபால்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டவருக்கு, வரி வசூல் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil GST


மத்தியப் பிரதேச மாநில வீட்டு வசதி மற்றும் கட்டுமான மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து, ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை கோரி அஜய் துபே என்பவர் கேள்வி எழுப்பினார்.

இவர் ஊழல் எதிர்ப்பு ஆர்வலராக இருக்கிறார். இவரது கேள்விகள், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தின் அலுவலகத்தை புனரமைத்தது, புதிய கட்டடங்கள் கட்டியதற்கான செலவு உள்ளிட்டவை ஆகும்.

இதற்கு ஜி.எஸ்.டி வரி செலுத்தினால் மட்டுமே பதில் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே மத்திய பிரதேசம் வீட்டுவசதி மற்றும் கட்டுமான மேம்பாட்டு வாரியம், தேவையான சேவையை பெறுவதற்கும், ஆவணங்கள் பெறுவதற்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டியாக ரூ.45 செலுத்தினார்.

இதுகுறித்து அஜய் துபே கூறுகையில், ஆர்.டி.ஐ தகவல்களை வாங்க மத்திய, மாநில ஜி.எஸ்.டி வரி விதிப்பது சட்டவிரோதமானது. சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் என் கோரிக்கையை தெரிவிப்பேன் என்றார்.

Bhopal activist files RTI asked to pay GST for information.

அடுத்த செய்தி