ஆப்நகரம்

போபால் விஷவாயு வழக்கு: போராளி அப்துல் ஜஃபார் மறைவு

போபால் யூனியன் கார்பைடு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்காகவும், ​​உயிர் பிழைத்தவர்களுக்காகவும் களத்தில் நின்று போராடி வந்த சமூக செயற்பாட்டாளர் அப்துல் ஜபார், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

Samayam Tamil 15 Nov 2019, 5:46 pm
நெடுங்காலமாக இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் விகாரங்களில், 1984ஆம் ஆண்டு போபால் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்த விஷவாயுக் கசிவு விபத்தும் ஒன்று.
Samayam Tamil abdul_jabbar


இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்து உயிரிழந்தனர். இந்த யூனியன் கார்பைடு விஷவாயு வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்காகவும், உயிர் பிழைத்தவர்களுக்காகவும் களத்தில் நின்று போராடி வந்த சமூக செயற்பாட்டாளர் அப்துல் ஜபார், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.



மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அப்துல் ஜபார், அண்மைக்கலமாகவே கடும் நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் காற்றில் இருக்கும் வாயுப் பிரச்சினையால் சமீப காலமாக அவரது கண் பார்வையும் மங்கலாகி வந்தது.

இந்நிலையில், ஜபார் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் நுரையீரல் பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாணவி ஃபாத்திமா லத்திஃப் மரணம்: முதல் முறையாக அறிக்கை வெளியிட்ட ஐஐடி

இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்ததாவது, ''செயற்பாட்டாளர் அப்துல் ஜபாருக்கு மிகச்சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும். தொடர்ந்து , அவர் விரைவில் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார்'' என்றும் நேற்று மாலை அறிவித்தார்.

மேலும், அப்துல் ஜஃபாரை சந்திக்க மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங்கும் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.


ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக நுரையீரல் பிரச்சினை கடுமையாகி நேற்றிரவு அவர் மருத்துவமனையிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். திக் விஜய் சிங் வருவதற்கு முன்பே ஜஃபார் இறந்துவிட்டதாக அவரது உதவியாளரான ஜெய பிரகாஷ் தெரிவித்தார்.



போபால் யூனியன் கார்பைடு விஷவாயு சம்பவத்தில் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் அப்துல் ஜபார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி