ஆப்நகரம்

மோடிக்கு டாட்டா காட்டும் நிதிஷ் குமார்: பாஜகவுக்கு கல்தா?

பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஆளுநரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 9 Aug 2022, 1:11 pm
பீகார் அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றம் தேசிய அளவில் கவனம் பெற்று வருகிறது. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியுடன் நிதிஷ் குமார் கரம் கோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அவர் ஆளுநருடன் சந்திக்க உள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Modi vs  Nitish


அக்னிபத் திட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில், பாஜகவுடன், முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முரண்பாடு ஏற்பட்டது. ஆனால் இது மட்டுமல்ல, தனது கட்சி பீகாரில் பாஜகவால் சூறையாடப்படுவதாக நிதிஷ் குமார் நினைப்பதாக சொல்கிறார்கள்.

இனியும் காலம் தாழ்த்தினால் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதாவால் கரைக்கப்பட்டுவிடும் என்பதாலே நிதிஷ் குமார் வேகமாக கூட்டணியிலிருந்து வெளியேற முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள்.
எடப்பாடி வைத்த டார்கெட்: சமாளிப்பாரா ஓபிஎஸ்? ஆதரவாளர்களுடன் ஆலோசனை!
பாஜகவுக்கு எதிர்ப்பு காட்டும் விதமாகவே குடியரசுத் தலைவர் பதவியை நிறைவு செய்த ராம்நாத் கோவிந்துக்கு ஒன்றிய அரசு அளித்த விருந்து நிகழ்ச்சியை, நிதிஷ் குமார் புறக்கணித்தார். புதிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவியேற்பு விழாவையும் அவர் புறக்கணித்தார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம்? தொடரும் விசாரணை!
காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்தால், 2024 மக்களவைத் தேர்தலிலும் இது எதிரொலிக்கும். பீகாரில் பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவாக அமையும் என்கிறார்கள்.

அடுத்த செய்தி